தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

May 29, 2009

நான் உன்னை நீங்கமாட்டேன்














ஒரு நிகழ்ச்சி

ஆடுகள் கூடையில் கொட்டிவைக்கப்பட்ட காய்ந்த புற்களை மேன்றுகொண்டிருந்தன. அமர் கைகளை குறுக்காகக் கட்டி மேலே பார்த்துக்கொண்டிருந்தார். எப்படி இருக்கீங்க அமர்?.

நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க. ரொம்ப நாள் கழித்து வந்திருக்கீங்க?

கொஞ்சம் வேல அதிகம். ஊருக்கு போகனும்னு போனமுறை சொன்னீங்க தானே?.

ஆமா லீவு கேட்டிருக்கிறேன். அரபி ஒன்னும் சொல்லமாட்டேங்கரான். எப்பயும் நான் ரம்ஜான் முடிஞ்சுதான் போவது வழக்கம். இந்த முறையும் அப்படி போனு சொல்லிருவான்னு பயந்துக்கிட்டிருக்கேன். பாப்போம் கொடுத்துருவான்னு நெனைக்கிறேன்.

அதான் வீட்டு நெனப்பு வந்து இப்படி மேலே பார்த்துக்கிட்டு இருக்கீங்கள். டிக்கெட் எல்லாம் எடுத்தாச்சா. இப்பவே எடுதிருங்கள் கொஞ்சம் கம்மியா இருக்கு.

எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை, அரபி தானே எடுத்து தருவான். ப்லாக் பண்ணி வச்சிருக்கேன்.

பையன் கூட பேசுவீங்கதானே?

பையன் இல்ல சார்; பொண்ணு. ஒன்றரை வயது ஆகுது.

பேசுவாளா?.

எப்ப போன் அடிச்சாலும் அவதான் எடுப்பா. எடுத்துகிட்டு எதாவது பேசிக்கிட்டு இருப்பா. இப்ப கூட அங்கிருந்து தான் வரேன் அழுதிட்டா.

ஒங்க பொண்ணு அழுதாளா?, நீங்களா?

ம்... ம்... அது வந்து எனக்குத்தான்.. கண்ணீர் தானாகவே வந்துரும். போனை காதிலேயே கொஞ்சநேரம் வைத்திருப்பேன் அப்புறம் நேரம் ஆனதும் கட் பண்ணீட்டு வந்துருவேன்.

இங்க வரும்போது எத்தனை மாதம்?.

மூனு மாதம் வயித்தில. வந்து கொஞ்சநாள் தூங்கவே முடியல.

இரண்டு வருடம் ஆகும் வரைக்கும் புள்ளைங்கள பிரிய மனசு வராது. இந்த தடவை போய் ரொம்ப நாள் இருந்துட்டு வாங்க.

உங்க வொஃப் எப்படி?.

ஒவ்வரு தடவை போன் செய்யும் போதும் இந்த முறை இரண்டு வருடம் இருந்துட்டு போங்கள் என்றுதான் சொல்லும்.

அப்புறம் என்ன நீங்க தான் இங்கவந்து பத்துவருடம் ஆயிருச்சில்ல போயிட்டு ஒரு இரண்டு வருடம் கழிச்சி வாங்க.

நானும் அதைத்தான் யோசிச்சேன் ஆனா..

அனா?..

அதுக்கு அப்புறம் இதைப்போல பிரச்சனை இல்லாத அரபி வீடு கிடைக்காது பாருங்க!...

ஒரு புத்தகம்.

நான் உன்னை நீங்கமாட்டேன் - உமபாலகுமார்


Click to download.

May 27, 2009

ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்
பிரசவம் இரா. முருகன்











சுஜாதாவால் சுட்டிக்காட்டப் பட்ட எழுத்தாளர்களில் ஒருவர் இரா.முருகன்.

ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம்’ சென்னை ஸ்நேகா பதிப்பகம் வௌயீடாக வந்தது. மார்ச் 2000-ல் சுஜாதா வௌயிட்டது இப்புத்தகம்.


மூடுவண்டித் திரைக்குப் பின்
முனகிநீ புரண்டிருக்கக்
காற்றணைக்கும் லாந்தர்
கைப்பிடித்துக் கூட வந்து
ஊர் உறங்கும் வேளை
பேர்தெரியா மருத்துவச்சி
வாசலிலே நின்றபோது
பேச்சுக் குரலெழுந்து
நித்திரை கலைந்த
நாய்கள் அதட்டும்.

பின்னிரவுப் பனியும்
பீடிப் புகையுமாய்
வாசலிலே நின்று
வானம் வெறித்திருக்க,
வெள்ளம் அழித்த அறுவடையை,
வீட்டுச் சுவர்கள் விழுந்ததை,
நீல மூக்குத்தி கடன்
நிலுவையில் மூழ்கியதை,

பால் மரத்த பசுமாட்டை,
பஸ் அடித்த வெள்ளாட்டை,
ஆயிக்குத் திவசம் தர
அய்யருக்கு அலைந்ததை,
காளிக்குத் தரவேண்டிய
கழுத்தறுத்த சேவல்களை,
ஆசையாய் நீ கேட்டு,
வாங்காதுபோன
வட்டுக்
கருப்பட்டியைச்
சுற்றும் நினைவுகள்
சூழ்ந்து குழம்ப,
நேரம் மறந்து நின்றபோது
ஆரோ வந்து சொன்னார்
அழகான குழந்தையென்று. *

ஆற்றுச் சலசலப்பில்
காலை விடிந்தபோது
உலகம் புதுசாச்சு
உள்ளமும் நேராச்சு.



கணையாழியில் முதல் படைப்பாக ஒரு புதுக் கவிதை பிரசுரமானதோடு இவருடைய எழுத்துலகப் பிரவேசம் தொடங்கியது.
கவிஞராக அறியப்பட்டு பின் சிறுகதையாசிரியராக, நாவலாசிரியராக முகிழ்ந்தவர். இலக்கியப் பத்திரிகைகளிலும் வெகுஜனப் பத்திரிகைகளிலும் இவருடைய படைப்புகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டுள்ளன.




Click to download.
சமுதாயவீதி 'தீபம்' நா. பார்த்தசாரதி

'சமுதாயவீதி' நாவல் சாகித்ய அகாதமி விருது பெற்றது.










நா.பா. அவர்களுக்கு சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நதிக்குடி. மகாகவி பாரதியார் ஆசிரியராய் இருந்த மதுரை சேதுபதிப் பள்ளியில் ஆசிரியராய் பணியாற்றியவர்.

இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். வணிக நோக்குடனான பத்திரிகைகளுக்கிடையே, குன்றிலிட்ட தீபம் போல் "தீபம்" பத்திரிகை ஒளிர்ந்தது. ஏறத்தாழ 23 ஆண்டுகள் ஒரு தவம் போல, ஓர் இலக்கியப் பத்திரிகையைத் தமிழகத்தில் வெளிக்கொணர வேண்டுமானால், அது லேசுப்பட்ட காரியமில்லை; அந்த அசகாயச் செயலை, மிகுந்த தைரியத்துடன் நிறைவேற்றிக்காட்டி நா.பா. தமிழ்கூறும் நல்லுலகில் சாதித்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற புதினங்களான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன.

நாற்பத்தைந்து வயதிற்குமேல் எம்.ஏ. படித்துத் தேறி, டாக்டர் பட்டத்திற்குப் பதிவு செய்துகொண்டார். பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும் என் தலைப்பில் ஆய்வேட்டினையும் சமர்ப்பித்தார். ஆனால் டாக்டர் பட்டம் கிடைக்க இரண்டே நாட்கள் இருந்த நிலையில் இதய நோய்க்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுக் காலமானார்.
நன்றி -விக்கிபீடியா


Click to download.

May 17, 2009

Privacy Policy for www.tamilebooksdownloads.blogspot.com

Privacy Policy for www.tamilebooksdownloads.blogspot.com If you require any more information or have any questions about our privacy policy, please feel free to contact us by email at pvekosri@gmail.com. At www.tamilebooksdownloads.blogspot.com, the privacy of our visitors is of extreme importance to us. This privacy policy document outlines the types of personal information is received and collected by www.tamilebooksdownloads.blogspot.com and how it is used. Log FilesLike many other Web sites, www.tamilebooksdownloads.blogspot.com makes use of log files. The information inside the log files includes internet protocol ( IP ) addresses, type of browser, Internet Service Provider ( ISP ), date/time stamp, referring/exit pages, and number of clicks to analyze trends, administer the site, track user’s movement around the site, and gather demographic information. IP addresses, and other such information are not linked to any information that is personally identifiable. Cookies and Web Beacons www.tamilebooksdownloads.blogspot.com does not use cookies. DoubleClick DART Cookie .:: Google, as a third party vendor, uses cookies to serve ads on www.tamilebooksdownloads.blogspot.com..:: Google's use of the DART cookie enables it to serve ads to users based on their visit to www.tamilebooksdownloads.blogspot.com and other sites on the Internet. .:: Users may opt out of the use of the DART cookie by visiting the Google ad and content network privacy policy at the following URL - http://www.google.com/privacy_ads.html Some of our advertising partners may use cookies and web beacons on our site. Our advertising partners include ....Google AdsenseThese third-party ad servers or ad networks use technology to the advertisements and links that appear on www.tamilebooksdownloads.blogspot.com send directly to your browsers. They automatically receive your IP address when this occurs. Other technologies ( such as cookies, JavaScript, or Web Beacons ) may also be used by the third-party ad networks to measure the effectiveness of their advertisements and / or to personalize the advertising content that you see. www.tamilebooksdownloads.blogspot.com has no access to or control over these cookies that are used by third-party advertisers. You should consult the respective privacy policies of these third-party ad servers for more detailed information on their practices as well as for instructions about how to opt-out of certain practices. www.tamilebooksdownloads.blogspot.com's privacy policy does not apply to, and we cannot control the activities of, such other advertisers or web sites. If you wish to disable cookies, you may do so through your individual browser options. More detailed information about cookie management with specific web browsers can be found at the browsers' respective websites.

May 11, 2009

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்














புத்தகத்தில் ஜோதிடரத்னம் கிரகங்களுக்கும் மனித உயிர்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்று சொல்லுகிறார். ஒருவகையில் எல்லா ஜோதிடர்களும் அதையே தங்களுக்கு ஆதாரமாக வைத்திருக்கிறார்கள்.

சிறுவயதில் இருந்து சில வகையான சந்தேகங்கள் முழுமையாய் விளக்கப்படாமல் என்னுள் உள்ளது.

மனநிலை சரியில்லதவர்கள் அமாவாசை பௌர்ணமி நாட்களில் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். ஏன்?

அமாவாசை பௌர்ணமி நேரங்களை கணத்த நாட்கள் என்றும் அந்த நாட்களில் பெரிசுகள் "போகும்" வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது என்றும் சொல்வார்கள். ஏன்?.

தேன் எடுக்கப்போகும் போது அமாவாசை பவுர்ணமி பார்த்து எடுக்கவேண்டும் என்றும் சொல்வார்கள். ஏன்?.

இது எல்லாம் சந்திரன் நம்மீது, நமது செயல்பாடுகள் மீது influence செய்கின்றது என்று கொள்ளலாமா?

அப்படிஎன்றல் ஜோதிடம் உண்மையானது தானா????..

என்வரையில் ஜோதிடம் முழுமையாய் உண்மையென்றால் அதிலிருப்பவை ( அதாவது ஜோதிடக் கட்டங்கள் சொல்பவை ) நடந்தே தீரும், நம்மால் மாற்றமுடியாது. எனவே கவலைப்படத்தேவை இல்லை.

ஜோதிடம் முழுமையாய் பொய் என்றால், அதற்கும் கவலைப்படத்தேவை இல்லை.

சரியா?

இனி புத்தகம் பற்றி..

இதில் 'ஜோதிடரத்னம்' S.சந்திரசேகரன் அவர்கள் குறைந்த அளவு கல்வி அறிவு உள்ளவர்களும் வடமொழி தெரியாதவர்களும் கூட ஜோதிடம் கற்கவேண்டும் என்று எளிதாக விளக்கியுள்ளார். ஆர்வமுள்ளவர்களுக்கு சரியான வழிகாட்டி.


Click to download.

May 4, 2009

சே குவேரா தமிழில்
''உலகின் எந்த மூலையிலும் ஏகாதிபத்தியம் தலை தூக்குவதைக் கண்டு உங்கள் ரத்தம் சூடேறினால் நீ என் தோழன்” -சே









க்யூபாவில் தான் உங்கள் புரட்சி வென்றுவிட்டதே. பிறகு ஏன் பொலிவியாவில் போராடுகிறீர்கள் என்ற கேள்விக்கு... சே பதிலளித்தார், "உண்மையில் நான் அர்ஜெண்டினாவை சேர்ந்தவன் மேலும் க்யுபாவை சேர்ந்தவன், பொலிவியாவை சேர்ந்தவன், ஆப்ரிக்காவை சேர்ந்தவன், ஆசியாவை சேர்ந்தவன், ஏன் அமெரிக்காவை சேர்ந்தவன் கூட. ஏனெனில் அடிமைப்பட்டு கிடக்கும் ஒவ்வொரு நாடும் என் தாய் நாடு. அவர்களுக்கு எனது போராட்டம் தேவையை இருக்கிறது. நானொரு கொரில்லா போராளி. அப்படி அழைக்கபடுவதைத்தான் நான் விரும்புகிறேன்"

ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்து ,மருத்துவப் படிப்பையும் முடித்த இளைஞன் அவன். அவனால் தன் வீடு, தன் வாழ்க்கை என்று இருக்க முடியவில்லை. நண்பன் ஒருவனுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் லத்தீன் அமெரிக்கா முழுவதும் சுற்றி வர தொடங்குகிறான். அந்த பயணத்தின் ஆரம்பம், உலக பண முதலைகளின் அழிவுக்கான ஆரம்பம் என்பது அப்போது யாருக்கும் தெரிந்திருக்காது. 1950ல் தொடங்கிய சேவின் பயணம்,1967 ஆம் ஆண்டு பொலிவிய ராணுவத்தால் முடிவுற்றது. இடையில் ஒரு நாள் கூட ஓய்வெடுத்ததில்லை. இன்றும் சேவைப் பற்றி படிக்கும்போதும், படங்களைப் பார்க்கும் போதும் நட்சத்திர தொப்பி அணிந்து அவரின் உருவம் என் கண் முன்னே வந்து போகிறது. சில நொடிகள் வரும் அந்த சிலிர்ப்பு. அதில் வாழ்கிறார் சே என்கிற எர்னெஸ்ற்றோ குவேரா டி லா செர்னா.

எந்த நாட்டிற்கெதிராக தன் வாழ்நாள் முழுவது போராடினாரோ, அந்த நாட்டு இளைஞர்களே டீஷர்டிலும், கீ செய்னிலும் சேவின் படத்தோடு திரிகிறார்கள். எந்த வரலாற்றை மறைக்க முயன்றார்களோ அதை அந்த நாட்டிலே படமாக எடுக்கிறார்கள். சேவை வாழும்போது மட்டுமல்ல, அவன் இறந்த பிறகும் ஜெயிக்க முடியவில்லை.
-நன்றி சாளரம்.....

Click to download.


முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Popular Posts