தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.

இந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

1. முயன்றவரை மரம் நடுங்கள்.

2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.

3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.

நன்றி
ஸ்ரீ


இங்கிருந்து இணையத்தில் தேடுங்கள்....
Custom Search

Apr 19, 2009

ரத்தக் காட்டேரி பிராம் ஸ்டோக்கர்.
தமிழில் ஜெகாதா












உலகின் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு நாடகங்களாகவும் கதைகளாகவும் சினிமாக்களாகவும் படைப்பாளியின் வசதிக்கேற்ப எத்தனையோ உருமாற்றத்தை இந்த டிராகுலா நாவல் உலகம் முழுவதும் அடைந்து விட்டது.


சவப் பெட்டியிலிருந்து டிராகுலாவை நாவலின் ஆசிரியர் பிராம் ஸ்டோக்கர் முடிவுக்குக் கொண்டு வந்தபோதும், வாசகனுக்கு ஏனோ இன்னும் அந்த ரத்தக் காட்டேரி ரத்தம் வழியும் உதடுகளுடன், ஜொலி ஜொலிக்கும் நெருப்புக் கண்களுடன், கூர்மையான வளைந்த கோரைப்பற்களுடன் மிகவும் அருகில் ரத்த தாகத்தோடு கவனித்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு உணர்வு இருப்பதாக, இந்நாவலின் மொழிபெயர்க்கும் பணி நிறைவடையும் நேரத்தில் என்னாலும் நினைக்க முடிந்தது.

சூரிய உதய நேரம் "ரத்தக் காட்டேரி'க்குச் சுத்தமாக ஒவ்வாத நேரம். ஆயினும் "இனிய உதய'த்தில் பவனி வரும் ரத்தக் காட்டேரி வாசகரை உவகை கொள்ளச் செய்யும் என நம்புகிறேன். என்றும் அன்புடன்,-ஜெகாதா


Click to download.
மெரினா சுஜாதா













திலீப் மீன் வறுவல் பொட்டலத்தை சுவாரசியமில்லாமல் கடிப்பான். (ஒரு ஏ கே 56 என்னடா வெல இருக்கும்) அவர்கள் மொழி தமிழ் அல்ல, இளமையும் வன்முறையும். 'ஜிம்' மில் போய் பம்ப்படித்து உடம்பை வளர்த்துக் கொண்ட அளவுக்கு மனம் வளராமல் ரத்த நாளங்களில் அட்ரினலின் உச்சத்துக்கு வடிகால் தேடி எப்படியாவது எதையாவது அவிழ்க்கவும் கவிழ்க்கவும் துடிக்கும் வயசு.

இந்த திலீப்பின் ஒருநாள் மெரினாவின் இரவும் அதைத்தொடர்ந்து வரும் முடிச்சுக்களும்தான் கதை. இறுதியில் ஒரு சுவாரசியமான திருப்பம் வரும். கணேஷ் வசந்த் இருவரும் கலக்குவார்கள்.

Clik to download.
சூரியனின் கதை











நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்துள்ள அண்டத்தினைப் பால் வழி என்பர். இரவு வேளையில், தெளிவான வானத்தில், கிழக்கு மேற்காகப் பிரகாசமான ஓர் ஒளிப்பட்டை அமைந்திருப்பதைக் காணலாம். இந்த ஒளிப்பட்டைக்குள் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன. பாலாறு ஒன்று வானத்தில் பாய்வதாகக் கற்பனை செய்து கிரேக்க விஞ்ஞானிகள் இதற்குப் பால் வழி என்று பெயரிட்டனர். இந்தியத் தத்துவ ஞானிகள் 'ஆகாய கங்கை' என்றனர். பால் வழியின் ஒரு அந்தத்தில் நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்திருக்கின்றன.


மாணவர்களுக்கு ஏற்ற அடிப்படை அறிவியல் நூல்கள் வெளிவர வேண்டிய அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. பாடநூல்களோடு துணை நூல்கள் பலவும் வெளிவர வேண்டும். விரிந்து வரும் அறிவியல் உண்மைகளைச் சகலரும் இலகுவில் தெரிந்து கொள்வதற்கு இவ்வகை நூல்கள் வழி அமைக்கும்.

Clik to download.

Apr 8, 2009

தந்து விட்டேன் என்னை















எனக்கு ரமணி சந்திரன் அவர்கள் எழுதும் நாவல், தொடர்கதைகள் ரொம்பப் பிடிக்கும். எதனால பிடிக்கும்னா, கதாநாயகன், கதாநாயகியின் பெயர்கள், வீட்டு நபர்களிடையே நிலவும் அன்பு, அக்கறை இப்படிப் பல காரணங்களை அடுக்கலாம்.



சமீபத்தில் அவர்களுடைய பேட்டியை சினேகிதில படித்தேன். அவங்க தமிழ் அகராதியின் உதவியுடன் கதாநாயகன், கதாநாயகிக்கு அழகாகவும், பொருத்தமாகவும் பெயர் வைப்பாங்களாம். சில சமயம் பொருத்தமான பெயர் கிடைக்க 2/3 தினங்களாகிடுமாம். -சில்லுனு ஒரு அரட்டை- காயத்ரி

Clik to download.

வாஸ்து சாஸ்திரம்










வாஸ்து சாஸ்திரம் என்பது நகர அமைப்பு, கட்டிடக்கலை என்பன சம்பந்தப்பட்ட, இந்தியாவின் மிகவும் பழமையான அறிவுத்துறைகளில் ஒன்றாகும்.

"வாஸ்து" என்றசொல் கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படவுள்ள நிலத்தைக் குறிக்கும். "வாஸ்து சாஸ்திரம்" என்பது, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும்.

இதன் தொடக்கம் கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டிருக்கக்கூடுமெனக் கருதப்படுகிறது. இந்துக்களின் முதல் நூல்களான நான்கு வேதங்களில், நான்காவது வேதமான அதர்வ வேதத்தில் இது பற்றிச் சொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

வாஸ்து சாஸ்திரத்தின் பல்வேறு அம்சங்களையும் விரிவாக விளக்கிப் பல நூல்கள் பழைய காலத்திலேயே எழுதப்பட்டுள்ளன. வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம், மக்களுடைய நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் பூத்திசெய்வதுடன், கட்டப்படுகின்ற கட்டிடம், மனிதன் இயற்கையுடனும், இப் பிரபஞ்சத்தின் ஒழுங்குடனும் இசைந்து போவதற்கு உதவுவதுமாகும்.

வாஸ்து சாஸ்திரம், ஒரு கட்டிடத்தை வெறும் கல்லாலும், மரத்தாலும், உருக்காலும், கொங்கிறீற்றாலும் (Concrete) கட்டப்பட்ட உயிரற்ற அமைப்பாகக் கருதுவதில்லை. ---கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இந்நூலில் சாதரண மக்கள் தெரிந்துகொள்ள போதுமானவற்றை தொகுத்துள்ளார் Dr.J. Perumal M.B.A, Ph.D.

Click to download.
ராம காவியம் தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்.

















நமது பாரத தேசத்தில் மட்டும் அல்ல - அதைச் சுற்றியுள்ள பல நாடுகளிலும் எண்ணற்ற ஆண்டுகளுக்கு முன்பே ராமாயணம் பரவி இருக்கிறது. தற்காலத்தில் ஐரோப்பிய - அமெரிக்க நாடுகளில் கூட ராமாயணம் பிரபலமாக இருக்கிறது. மற்ற எத்தனையோ புராணங்கள் இருந்தும் ராமாயணம் இந்த அளவுக்கு பேசப்பட காரணம் என்ன? அது நமது வாழ்க்கையோடு ஒப்பிடக்கூடிய அளவில் ஒன்றிய தன்மைதான்.

ஸ்ரீமத் ராமாயணத்தை வால்மீகி முனிவருக்கு பிறகு பல பெருமக்கள் தமது வழியில் - தமது மொழியில் கவிதையாக, உரைநடையாக, ஓவியமாக என்று உருவாக்கி உலகத்துக்கு கொடுத்திருக்கிறார்கள்.


இப்புத்தகம் தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவருக்கே உரிய எளிய நடையில் அருளியது. இதனை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அனைவருக்கும் கிடைக்கும்படி கொடுத்த திரு. Dr.J. Perumal. M.B.A. Ph.D அவர்களுக்கு நன்றி.


Click to download.

இடைவெளி அதிகமில்லை














எப்படித்தான் இப்படியெல்லாம் எழுதுகிறீர்கள் என்று ஒரே வியப்பு. இந்தியாவுக்கு வரமுடிந்தால் உங்களைச் சந்திக்க முடியுமா?. சந்தித்து கோடிக்கணக்கான நன்றிகள் சொல்ல வேண்டும். உங்களுடைய பேனாவுக்கும் கைக்கும் கோடி முத்தம் கொடுக்க வேண்டும்.

அன்பு வாசகி..
இர்பான் அப்தீன்


Click to download.


முக்கியமான பதிவுகள்...



நீங்க என்ன சொல்லப்போறீங்க..

Blog Archive

Popular Posts